பிரான்சில் தேவாலயத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் அங்கிருந்த போதகரின் கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
மேலும் இத்தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Update 3.45
------------------------------------------------------------
பிரான்சின் வடக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் இருவர் பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 6-7 பேர் வரை இவ்வாறு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு போதகர், இரண்டு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.