பிரசன்னவின் மனைவிக்கு வெளிநாடு செல்ல அனுமதி...

Tuesday, 30 August 2016 - 13:10

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF...
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவி மோரின் ஸ்டலே ரணதுங்கவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மனிலால் வைத்தியதிலக அனுமதி வழங்கியுள்ளார்.

தானக்கு வெளிநாடு செல்ல அனுமதி வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலைக்கப்பட்ட பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீதொடமுல்ல பிரதேசத்தில் காணி ஒன்றை பெற்று தருவதாக கூறி வர்த்தகர் ஒருவரிடம் ரூபாய் 64 மில்லியன் பணத்தை பெற்று கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவிக்கும் வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.