நடிகை ரம்பா விவாகரத்து கோரவில்லையாம்!

Tuesday, 25 October 2016 - 18:19

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%21

நடிகை ரம்பா அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன. அந்த அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால் தற்போதைய தகவல், நடிகை ரம்பா அவரது கணவரிடம் சேர்த்து வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ததாக தற்போதைய தகவல் கூறுகிறது.

1990 முதல் சுமார் 10 வருடங்கள்   தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ரம்பா. சுமார் 40 திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் விஜயவாடா இவரது சொந்த ஊர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்தார்.
 
இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பா விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக தகவல் வந்தது.
 
ஆனால் இந்த செய்தி தவறு என்றும் அவர் தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ததாக தற்போதைய செய்தி தெரிவிக்கிறது.

நடிகை ஒருவர் முதன்முறையாக கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.