இங்கிலாந்து இளவரசர் வில்லியம், தனது மனைவி இளவரசி கேத் மிடில்டனுடன் 2012-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, அங்கு விடுமுறையை உல்லாசமாகவும், உற்சாகமாகவும் கழித்தார்.
அப்போது அங்கு கோடே டி ஆசுர் என்ற கடலோர பகுதியில் உள்ள ஒரு உல்லாச மாளிகையில் அவர்கள் தங்கினர். அப்போது ஒரு நாள், அந்த மாளிகையின் பால்கனியில் இளவரசர் முன்னிலையில் இளவரசி மேலாடையின்றி உலா வந்தார்.
இதை ரகசியமாக படம் எடுத்து, அந்த நாட்டின் 'குளோசர்' பத்திரிகை வெளியிட்டு விட்டது. அதுவும், ' இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காக ஒட்டுமொத்த உலகமே செத்துக்கொண்டிருக்கிறது' என தலைப்பிட்டு வெளியிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளவரசி கேத் மிடில்டனும், இளவரசர் வில்லியமும் அப்போது வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இளவரசியை மேலாடையின்றி படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என 6 பேர் மீது அந்தரங்க சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
6 பேர் மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக பாரீசில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அப்போது அங்கு கோடே டி ஆசுர் என்ற கடலோர பகுதியில் உள்ள ஒரு உல்லாச மாளிகையில் அவர்கள் தங்கினர். அப்போது ஒரு நாள், அந்த மாளிகையின் பால்கனியில் இளவரசர் முன்னிலையில் இளவரசி மேலாடையின்றி உலா வந்தார்.
இதை ரகசியமாக படம் எடுத்து, அந்த நாட்டின் 'குளோசர்' பத்திரிகை வெளியிட்டு விட்டது. அதுவும், ' இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காக ஒட்டுமொத்த உலகமே செத்துக்கொண்டிருக்கிறது' என தலைப்பிட்டு வெளியிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளவரசி கேத் மிடில்டனும், இளவரசர் வில்லியமும் அப்போது வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இளவரசியை மேலாடையின்றி படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என 6 பேர் மீது அந்தரங்க சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
6 பேர் மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக பாரீசில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.