இன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் பலி..

Sunday, 04 December 2016 - 15:01

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் பலியாகினர்.

பதுளை, வெலிகந்த, கெலன்பிந்துனுவௌ, மிஹிந்தலை மற்றும் சீகிரிய ஆகிய பிரதேசங்களிலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பொலன்னறுவை – வெலிகந்த, சிங்கபுர – மஹவெலிகந்த வீதியின் மல்வென்ன பிரதேசத்தில் உந்துரளி ஒன்றும் டிபர் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளியில் சென்ற இருவரும், வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதன் பின்னர் மரணமாகினர்.

57 மற்றும் 60 வயதுகளை உடையவர்களே சம்பவத்தில் பலியானதுடன், டிபர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கெலன்பிந்துனுவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி வித்தில் 60வயதான ஒருவர் உயிரிழந்தார்.

அவர் பயணித்த கெப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, பதுளை தென்னவங்குவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் 43 வயதான ஒருவர் இன்று அதிகாலை பலியானார்.

இதனிடையே கலென்பிந்துனுவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானர்.

அவர் பயனித்த கெப் ரக வாகனம் கவிந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, மிஹின்தலை – நொச்சிகுலம் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 28 வயதுடைய ஒருவர் பலியானார்.