இந்தியா, பஞ்சாப்பில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரை வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள மவுர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் குல்விந்தர் கவுர் (வயது 22) என்ற நடனப்பெண்ணின் நடன நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது மணமகனின் நண்பர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மணமகனின் நண்பர்களில் ஒருவர் திடீரென மேடையில் ஆடிக்கொண்டிருந்த நடனப்பெண்ணுடன் ஆட முயற்ச்சித்தார். அப்போது சிலர் மேடையில் ஆடக்கூடாது என்று அவரை எச்சரித்தனர்.
இதனால் கோபம் அடைந்த அந்த மணமகனின் நண்பர் தான் வைத்து இருந்து துப்பாக்கியை எடுத்து நடனப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த நடனப்பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
திருமண நிகழ்ச்சி வந்திருந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது நடுவழியிலேயே நடனப்பெண் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து குற்றவாளிகள் 4 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
நடனப்பெண்ணை துப்பாகியால் சுட்ட வாலிபர் பில்லா என்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் நடனப்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள மவுர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் குல்விந்தர் கவுர் (வயது 22) என்ற நடனப்பெண்ணின் நடன நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது மணமகனின் நண்பர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மணமகனின் நண்பர்களில் ஒருவர் திடீரென மேடையில் ஆடிக்கொண்டிருந்த நடனப்பெண்ணுடன் ஆட முயற்ச்சித்தார். அப்போது சிலர் மேடையில் ஆடக்கூடாது என்று அவரை எச்சரித்தனர்.
இதனால் கோபம் அடைந்த அந்த மணமகனின் நண்பர் தான் வைத்து இருந்து துப்பாக்கியை எடுத்து நடனப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த நடனப்பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
திருமண நிகழ்ச்சி வந்திருந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது நடுவழியிலேயே நடனப்பெண் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து குற்றவாளிகள் 4 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
நடனப்பெண்ணை துப்பாகியால் சுட்ட வாலிபர் பில்லா என்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் நடனப்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.