சிறுநீரக மோசடி - சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலம் நீடிப்பு...

Wednesday, 07 December 2016 - 17:19

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+-+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜைகள் 5 பேரும் இம்மாதம் 22ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.

பின்னர்  மன்னார் பிரதேசத்தில் வைத்து அதில் 5 பேரை காவற்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.