கடந்த 1987ஆம் ஆண்டு உலக வெற்றி கிண்ணத்தை சுவீகரித்த அவுஸ்திரேலிய அணியினருக்கான பதக்கங்கள் 30 வருடங்களுக்குப் பின்னர் இன்று வழங்கப்படுகிறது.
1987ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றதற்கான கிண்ணம் அப்போது வழங்கப்பட்ட போதிலும், அணியினருக்கு தனிப்பட்ட பதக்கங்கள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய சிட்னி கிரிக்கட் விளையாட்டுத் திடலில் அவுஸ்திரேலிய பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் சர்வதேச போட்டியின் போது, 1987 உலக கிண்ணத்தை கைப்பறிய அணியைச் சேர்ந்த 14 பேருடன் அணியின் முகாமையாளர் மற்றும் அணியின் மருத்துவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது.