சுதந்திர கட்சியை உயர்த்துவதற்கு பதிலாக அதன் தலைவர்கள் தமது செல்வாக்கை உயர்த்தவே முயற்சித்தனர் - தயா குற்றச்சாட்டு...

Sunday, 22 January 2017 - 20:20

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை உயர்த்தி வைப்பதற்கு பதிலாக அதன் தலைவர்கள் கடந்த காலங்களில் தமது செல்வாக்கை உயர்த்தவே முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த கால ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பொருட்படுத்தாமல், தம்மை உயர்த்தி கொள்வதிலேயே நோக்காக கொண்டிருந்தனர்.

இதனாலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று நெருக்கடியான ஒரு நிலையை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி நீடித்து நிலைத்திருக்க வேண்டும் எனில் கட்சியின் அங்கத்தவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.