ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நாளை சட்டசபையில் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர்

Sunday, 22 January 2017 - 20:31

%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை மாவட்ட உயரதிகாரிகளுடன் பேச்சுவாத்தை ஒன்றில் ஈடுப்பட்டார்.

பின்னர், அவர் மதுரையில் இருந்து இன்று பிற்பகல், சென்னையை சென்றடைந்ததும் செய்தியாளர்கள் மத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்தார்.

அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நாளை சட்டசபையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.