சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஏற்ற வகையிலான முறைமை குறித்து ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, அரசாங்க அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளது.
திட்டமிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால், மீன்பிடிக்கான தடை விதிக்கப்பட்டது.
இந்த வகையான பயிற்சிகள் மூலம் இப்படியான மீன்பிடி தடை எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன், மீன்பிடித்துறையும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 24 அதிகாரிகள் பயிற்றப்பட்டுள்ளனர்.