தற்கால சூழ்நிலைக்கு ஏற்றவகையிலேயே சம்பந்தன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படும் என சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தை பலர் விமர்சிப்பது தற்காலத்திற்குப் பொருத்தமற்றது.
அவர் தற்கால சூழ்நிலைக்கு பொருத்தமான கருத்துக்களையும், நடவடிக்கைகளையுமே மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஈழம், என்று கூறி அனைத்தையும் இழந்ததுவிட்ட நிலையில் இருக்கின்ற மக்களையும் இழக்கின்ற சூழலை உருவாக்கப்படக் கூடாது.
எனவே இவ்வாறான நிலமைகளை நன்கு அறிந்த சம்பந்தன், ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுக்காக முயற்சிக்கின்றார் என அவர் குறிப்பிட்டார்.