அரசியல்வாதிகளை நம்பிப் பலனில்லை பரவிப்பாஞ்சான் மக்களும் தொடர் போராட்டத்தில் (படங்கள்)

Monday, 20 February 2017 - 14:41

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் இன்றுமுதல் தங்களது காணிகளை கையளிக்கும் வரை தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர்

இவர்கள் இன்று காலை முதல் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் முற்றாக பரவிப்பாஞ்சான் காணிகள் விடுவிக்கப் படவில்லை

பரவிப்பாஞ்சான் காணிகளை முற்றாக விடுவிப்பதாக வாக்குறுதிகள் மட்டுமே அரசியல்வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும் வழங்கப்பட்டு இருந்தது ஆனால் இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் முற்றாக விடுவிக்கப்படும் வரை தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர்: நிபோஜன்