காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் - மட்டக்களப்பில் போராட்டம்

Friday, 24 February 2017 - 18:50

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், பொது மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல காவல்துறை குழுக்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.