உயர் ரக உணவுப் பொருட்களை குறைந்த விலைகளில் சதோச ஊடாக நாடெங்கிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக நாட்டில் இந்த ஆண்டிற்குள் 500 சதோச கிளைகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றையதினம் 52 சதோச கிளைகள் திறந்து வைக்கப்பட்டன.
கொஹுவல சதோச புதிய கிளையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.