ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கொலை செய்யப்படுகின்றமை மற்றும் தாக்கப்படுகின்றமை போன்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களது தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் பாதுகாப்பு கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தாய் நாட்டுக்காக போராடிய பாதுகாப்பு தரப்பினரை பாதுகாக்க பொறுப்புடன் செயலாற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.