மனைவியை கொலை செய்த கணவர்..

Sunday, 23 April 2017 - 14:02

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D..
கல்கிஸ்ஸ - அத்திடிய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

அத்திடிய - சித்தார்த மாவத்தையை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்துள்ள நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட  உள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குறித்த பெண்  இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.