மஹியங்கனை – வடவல வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒருவரை காட்டு யானை தாக்கியுள்ளது.
நேற்றிரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் கடும் காயத்திற்கு உள்ளான அவர் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு காட்டு யானைத் தாக்கத்திற்கு உள்ளானவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.