வெனிசுலா ஜனாதிபதி நிகலோஸ் மதுரோ, அந்த நாட்டு எதிர்கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என கோரி கடந்த பல வாரங்களாக எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையிலேயே எதிர்கட்சி ஜனாதிபதி நிகலோஸ் மதுரோ, எதிர்கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளார்.
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி இவ்வாறு எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றன.
எவ்வாறாயினும் பொதுத் தேர்தலை விரைவில் நடத்த தயாராக இருப்பதாக வெனிசுலா ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.