மத்துகம நீதிமன்றத்திற்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது...

Tuesday, 25 April 2017 - 15:56

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
மத்துகம நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 10.00 மணியளவில் மத்துகம காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகத்திற்குரிய பெண்ணை சோதனை செய்த போதே இந்த ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

பெந்தொட்டை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான குறித்த பெண்ணிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பில் மத்துகம காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.