பாகிஸ்தானில் பேருந்து மீது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலர் பலி...

Tuesday, 25 April 2017 - 20:18

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில், சிறிய ரக பேரூந்து ஒன்றின் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
 
கொல்லப்பட்டவர்களில் இரண்டு சிறார்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை கிராமமான குர்ராம் மாவட்டத்தில் இந்த குண்டுத் தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த குண்டுத் தாக்குதல் காரணமாக பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் இதே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சிற்றூர்ந்து குண்டுத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.