வட மேற்கு லண்டனில் பயங்கரவாத ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்துள்ள போதிலும், அவரது உயிருக்கு அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கென்ற் பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் ஒன்றின் போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.