மலேசிய அரசாங்கமும் அந்த நாட்டின் தனியார் முதலீட்டாளர்களும் இலங்கையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட விடயங்களில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மலேசியாவின் முதலீட்டாளர்கள் இலங்கையில் எண்ணெய், எரிவாயு மற்றும் சக்திவளத்துறைகளிலும் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மலேசியாவின் உயர்ஸ்தானிகர் வான் சாய்டி வான் அப்துல்லா இதனை நேற்று தெரிவித்துள்ளார்.