இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கானை நியமிக்கலாம் என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாத நிலையில், இந்திய அணி விளையாடி வருகின்றது.
எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் செம்பியன் கிண்ணத் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை என்று தலைமை பயிற்சியாளர் அணில் கும்ப்ளே மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சஹீர் கானை நியமிக்கலாம் என தமது டுவிட்டர் பதிவொன்றினூடாக ஹர்பஜன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாத நிலையில், இந்திய அணி விளையாடி வருகின்றது.
எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் செம்பியன் கிண்ணத் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை என்று தலைமை பயிற்சியாளர் அணில் கும்ப்ளே மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சஹீர் கானை நியமிக்கலாம் என தமது டுவிட்டர் பதிவொன்றினூடாக ஹர்பஜன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.