கிராமத்தையே சோகத்தில் ஆழ்தியுள்ள சம்பவம்! காணொளி இணைப்பு

Wednesday, 24 May 2017 - 11:59

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கணவர், குழந்தை மற்றும் இரு சகோதரிகள் மரணத்தோடு போராடும் நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஒன்று தம்புள்ளை -  அடேஎலேன் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தம்புள்ளை பேருந்து தரிப்பிடத்தின் அருகாமையில் வர்த்தக நிலையம் ஒன்றினை முன்னெடுத்து சென்றுள்ள இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள போது, குறித்த இளம் பெண் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது 12 வயது மகள் மற்றும் சகோதரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தம்புள்ளை மருத்துவமனையில் 20 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் தம்புள்ளை பேருந்து தரிப்பிடத்தின் அருகாமையில் வர்த்தக நிலையங்களை முன்னெடுத்து சென்றவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு...