நைவல - திவுலபிடிய பிரதான வீதியின் உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவரும் மற்றும் யுவதியொருவரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் குறித்த இருவரும் பயணித்த உந்துருளி பவுஸர் ரக வாகனமொன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
18 வயது இளைஞரும் மற்றும் 16 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பவுஸர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் குறித்த இருவரும் பயணித்த உந்துருளி பவுஸர் ரக வாகனமொன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
18 வயது இளைஞரும் மற்றும் 16 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பவுஸர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.