சைட்டம் எதிர்ப்பு பேரணி மீது இன்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்...

Wednesday, 24 May 2017 - 19:32

%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...+
மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த சைட்டம் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு காவற்துறையினர் இன்று பிற்பகல் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டிருந்த காலிமுகத்திடல் வீதியினுள் உள்நுழைய முற்பட்ட போதே இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.