மன்னாரில் பாடசாலை மாணவியொருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை...

Thursday, 25 May 2017 - 7:40

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88...
மன்னார் - பெரிய பாலத்திற்கு அருகில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை 6.15 மணி அளவில் கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் மன்னார் - உப்புக்குளம் பிரதேசத்தை சேர்ந்த  உயர் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பயணப் பையில் இருந்து கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தாய் தன்னை புறக்கணிப்பதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது மன்னார் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மன்னார் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.