மென்செஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு ஒன்று குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ள சல்மான் அபேடியின் தந்தையும், இளைய சகோதரரரும் லிபியாவின் ட்ரிபொலி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரது மூத்த சகோதரர் வார்விக் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்செஸ்டரில் இசை நிகழ்ச்சி ஒன்றை அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் பலியானதுடன், மேலும் 65 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.