கரூரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட சிறுவனை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
கரூர் அருகே ஆண்டான் கோயில் கிழக்கு எம்.ஜி.ஆர் நகரச் சேர்ந்தவர் கருப்பன் மகன் சந்தோஷ். 8 வயதாகும் இந்தச் சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறான்.
இன்று காலை வழக்கம் போல சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையேயான சிறிய சந்தில் புகுந்தபோது, எதிர்பாராதவிதாமாக அதில் சிக்கிக் கொண்டான்.
அங்கிருந்து வெளியேற முடியாமல் அலறி துடித்தான். அருகில் இருந்தவர்கள் அந்தச் சிறுவனை மீட்க முடியாத காரணத்தால், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு சுவரில் துளையிட்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்தச் சிறுவனை மீட்டனர்.
கரூர் அருகே ஆண்டான் கோயில் கிழக்கு எம்.ஜி.ஆர் நகரச் சேர்ந்தவர் கருப்பன் மகன் சந்தோஷ். 8 வயதாகும் இந்தச் சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறான்.
இன்று காலை வழக்கம் போல சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையேயான சிறிய சந்தில் புகுந்தபோது, எதிர்பாராதவிதாமாக அதில் சிக்கிக் கொண்டான்.
அங்கிருந்து வெளியேற முடியாமல் அலறி துடித்தான். அருகில் இருந்தவர்கள் அந்தச் சிறுவனை மீட்க முடியாத காரணத்தால், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு சுவரில் துளையிட்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்தச் சிறுவனை மீட்டனர்.