மென்செஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரிட்டன் காவல்துறையினரால் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ப்பட்ட குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 58 இற்கும் அதிகமானோர் காயமடைந்நதனர்.
இந்த நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனைய 9 பேரிடமும் பிரிட்டன் காவல்துறையினரால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.