ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம் மீது தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில், 05 காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, குறித்த பகுதியில் உள்ள மற்றொரு இராணுவ முகாம் மீது கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.