ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளதற்கான காரணம் வெளியானது?

Saturday, 27 May 2017 - 19:08

%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%3F
உயிர் அச்சுறுத்தலின் காரணமாகவே பொதுபலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பொதுபலசேனாவின் நிறைவேற்று அலுவலர் திலந்த வித்தானகேவிடம் சிறப்பு காவற்துறை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு உயிரச்சுறுத்தல் உள்ளதாக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பிலேயே இன்றை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.