சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 14 மாவட்டங்களில் 119 பேர் வரையில் உயிரிழந்ததுடன் 150 பேர் காணாமல்போயுள்ளனர்.
மாவட்ட செயலாளர்களின் தகவல்களுக்கு அமைய இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 3 லட்சத்து 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய 103 பலியானதுடன் 113 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14 மாவட்டங்களில் மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த 14 மாவட்டங்களிலும், வெள்ளம் மண்சரிவு மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 51 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2 ஆயிரத்து 937 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 47 பேர் பலியானதுடன், 4 ஆயிரத்து 815 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 31 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் 44 மத்திய நிலையங்களில் பாதிக்கப்பட்ட 1194 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 844 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, பதுல்பான, கிரியெல்ல, இறக்குவானை, எஹலியகொட, குருவிட்ட, நிவித்திகல, எலபாத்த, கலவான,அயகம, ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகளை வழங்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில், தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் இன்று களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர்களின் தகவல்களுக்கு அமைய இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 3 லட்சத்து 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய 103 பலியானதுடன் 113 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14 மாவட்டங்களில் மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த 14 மாவட்டங்களிலும், வெள்ளம் மண்சரிவு மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 51 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2 ஆயிரத்து 937 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 47 பேர் பலியானதுடன், 4 ஆயிரத்து 815 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 31 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் 44 மத்திய நிலையங்களில் பாதிக்கப்பட்ட 1194 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 844 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, பதுல்பான, கிரியெல்ல, இறக்குவானை, எஹலியகொட, குருவிட்ட, நிவித்திகல, எலபாத்த, கலவான,அயகம, ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகளை வழங்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில், தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் இன்று களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.