தென் சீன கடல்பிராந்திய சர்வதேச வான் வெளியில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க கண்காணிப்பு வாநூர்தியை, சீன தாக்குதல் வாநூர்தி ஒன்று அண்மித்ததாக அமெரிக்க கடல்படை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார காலப்பகுதியினுள், அமெரிக்க மற்றும் சீன வாநூர்திகள் 200 யார் தூரத்தில் அபாயகரமான முறையில் மிக நெருக்கமாக பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வான்பரப்பில் பறக்கும் சீன வாநூர்திகள் மிக அவதானமாக செயல்பட வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.