விபத்தில் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வாகன ஓட்டப் பந்தய வீரர் ஆனந்த வெடிசிங்க சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நுவரெலியாவில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன ஓட்டப் பந்தயம் ஒன்றின் போது ஏற்பட்ட விபத்தினால் அவர் காயமடைந்தார்.
இதனை அடுத்து கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த போதும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.