தகுதிகாண் காலத்தின்போது அனுமதியின்றி திருமணம் செய்தமை காரணமாக சேவையிலிருந்து நீக்கப்பட்ட 149 காவல்துறை அலுவலர்களை சேவையில் மீண்டும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது.
இதற்கமைய, நிபந்தனைகளின் கீழ் அவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர், குறித்த தகுதிகாண் காவல்துறையினர், தமது இணக்க உறுதிப்பாட்டை காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.