ஆறு மாதங்களில் 426 விவசாயிகள் தற்கொலை

Friday, 23 June 2017 - 21:34

%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+426+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் 426 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண்மை உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மராத்வாடா பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் மாத்திரமே இந்த விவசாயிகளின் மரண எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
 
தற்கொலை செய்து கொண்ட 426 விவசாயிகளில், 257 குடும்பங்களுக்கு மாத்திரமே இதுவரையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.