சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய யாப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
லண்டனில் இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, புதிய யாப்பினை ஐ.சீ.சீ. ஏற்றுக் கொண்டதாக, அதன் தலைவர் சசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.
இந்த யாப்புக்கு சிறிலங்கா கிரிக்கட் மற்றும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை என்பன கடந்த ஏப்ரல் மாதம் எதிர்ப்பை வெளியிட்டன.
எனினும் பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரகாரம், தற்போது இது ஏகமனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.