இங்கிலாந்தில் இன்று ஆரம்பமான 11 ஆவது மகளிர் ஒருநாள் சர்வதேச உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இரண்டு போட்டிகள் இடம்பெறுகிறது.
இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் மைதானத்தில் இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்ற நிலையில் 13.1 ஓவர்கள் நிறைவில், விக்கட் இழப்பின்றி 47 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணியின் சகலதுறை வீராங்கனையான முன்னாள் அணித்தலைவி ஷஷிகலா சிறிவர்தன மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
மேலும், தற்போதைய அணித்தலைவி இனோக்கா ரணவீர உட்பட்ட கடந்த 2013 உலக கிண்ண போட்டிகளில் விளையாடிய 8 பேர் இம்முறையும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.