தந்தை ஒருவர் மகளுக்கு செய்துள்ள அதிர்ச்சிகர செயல்!

Saturday, 24 June 2017 - 16:46

%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%21+

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளை தந்தையே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவரது  22 வயதுடைய மகள், அதே பகுதியைச் சேர்ந்த  இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதை மீறி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார் மகள்.

அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. 

திருமணத்துக்கு பிறகு தனது தந்தை வீட்டுக்கு மகள் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர் வீட்டுக்கு தந்தை சென்றுள்ளார்.

அப்பா திடீரென்று வந்ததால் பதற்றமடைந்து உட்கார்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்தார்.

ஆனால், அவருடன் வந்திருந்த உறவினர்கள், குழந்தையை அவரிடமிருந்து பிரித்தனர்.

பின்னர் கட்டிலோடு சேர்த்து மகளை கட்டியுள்ளனர்.

கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை அவர் மீது ஊற்றியுள்ளார் தந்தை.

தன்னை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார் மகள்.

ஆனால், அவர்கள் இரக்கமின்றி தீயை வைத்துவிட்டு ஓடியுள்ளனர்.

மண் எண்ணெய் ஊற்றப்பட்டதால் தீ குப்பென்று பற்றிக்கொண்டது.

கதறிய குறித்த பெண்ணின் சத்தம் சிறிது நேரத்தில் குறைந்துள்ளது.

பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் எரிந்து கரி கட்டையானார் மகள்.

காவற்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள இரண்டு பேரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.