சொந்த மகளை சீரழித்த கொடூர தந்தை!..வெட்டிக்கொன்ற மகன்!

Monday, 26 June 2017 - 18:33

%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21..%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%21
சொந்த மகளை தந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை அறிந்த மகன் தனது தந்தையை கொலை செய்த சம்பவமொன்று குஜராத்தில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மகளுக்கு திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவருடன் ஏற்ப்பட்ட தகராறு காரணமாக தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த தந்தை தனது மகளை இரு முறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் இது குறித்து அப்பெண் தனது 19 வயதான சகோதரருக்கு தொலைப்பேசி மூலம் கூறியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த குறித்த இளைஞர் வீட்டிற்கு வந்து அரிவாளை எடுத்து அவரின் தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் அவர் நிலைகுழைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவற்துறையினர், இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.