தூக்கில் தொங்கிய குடும்பம் தொடர்பில் வௌியாகியுள்ள மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

Tuesday, 27 June 2017 - 18:33

%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
மாத்தறை – கம்புருபிட்டிய – பெரளிஹதுர 44 வயது தந்தையும், அவரது 10 மற்றும் 16 வயது மகள்களும், 14 வயது மகனும் இன்று அதிகாலை உடலங்களாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் வசித்துவந்த வீடு தீப்பற்றிய நிலையில், பிரதேச மக்கள், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதே குறித்த நால்வரின் உடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
 
வீட்டை தீவைத்துக் கொளுத்திய தந்தை, வீட்டின் அருகிலுள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தாமும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த சிறார்களின் தாய் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சிறார்கள் அவரது தந்தையால் கொலைசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து, வீட்டை தீவைத்துக் கொளுத்திய தந்தை, வீட்டின் அருகிலுள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தாமும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் , இன்று இடம்பெற்ற விசாரணையில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற தினம் வீட்டில் இருந்து இளைய சகோதரி அவரது மூத்த சகோதரரான இளம் தேரருக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு தந்தை தங்களின் கைகளை கட்டி கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளதாக 
இன்று இடம்பெற்ற நீதவான் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் , காவற்துறைக்கு கிடைத்த கடிதத்தில் தாம் அனைவரும் தங்களில் சுய விருப்பத்தின் பேரிலேயே தற்கொலை செய்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தந்தை மற்றும் மகள்கள் தங்கியிருந்த குறித்த வீட்டில் வன்கொடுமைகள் இடம்பெறுவதாக இதற்கு முன்னர் 119 காவற்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தேரரொருவர் குறிப்பிட்டுள்ளார்.