நாளைய போட்டி தொடர்பில் மெத்தீவ்ஸ் கருத்து (காணொளி இணைப்பு)

Thursday, 29 June 2017 - 19:04

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
2000 ம் ஆண்டின் பின்னர் காலியில் இடம்பெறும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் இறுதி 11 பேரை நாளைய தினம் ஆடுகளத்தை ஆய்வு செய்த பின் தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் ஏன்ஜலோ மெத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தான் நாளைய போட்டியில் பந்து வீச போவதில்லை என குறிப்பிட்ட அவர் , காற்று மற்றும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு இறுதி 11 பேரும் தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை காலை 10.00 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளும் ஒரு டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.