சட்டவிரோதமாக வாகன பாகங்கள் இறக்குமதி; ஒருவர் கைது

Friday, 21 July 2017 - 10:02

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%3B+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பொதுஹெர - தம்பொக்க பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வாகன பாகங்களை இறக்குமதி செய்து, வாகன தயாரிப்பினை முன்னெடுத்து சென்றுள்ள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம், பாணந்துறை வலான குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய சந்தே நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போயகனே பிரதேசத்தினை சேர்ந்த 52 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், நேற்றைய தினம் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.