இஸ்ரேலிய பழைய நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய நகரத்தில், புனித பிரதேசத்திற்கு செல்லும் வாசல் பகுதியில் உலோக கண்டு பிடிப்பு கருவிகளை பொருத்திய நிலையில், வன்செயல் சம்பவங்கள் இடம்பெறலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அதிக எண்ணிக்கையிலானவர்கள் அந்த நகரத்தில் ஒன்று கூடவேண்டும் என பாலஸ்தீனிய தலைவர்களினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை அடுத்து இளைஞர்களின் நடமாட்டம், இஸ்ரேலியர்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கடந்த வாரம் இஸ்ரேலிய, அராபிய துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது இரு இஸ்ரேலிய காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.