இலங்கை அணி இதனை செய்தால் வெற்றி பெறமுடியும்!!: கௌதம் கம்பீர்

Sunday, 23 July 2017 - 14:08

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21%21%3A+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தங்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்தால் சரியான போட்டியை கொடுக்க முடியும் என இந்திய கிரிக்கட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடையவில்லை.

அத்துடன், தற்போது இந்திய அணி திடமாக இருக்கும் நிலையில், இலங்கை அணிக்கு சாதகமாக களங்கள் அமைந்தால் மட்டுமே இலங்கை வெற்றிகளை எட்ட முடியும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.