ஆதுருப்புவீதி காவற்துறை நிலையத்தில் சேவை புரிந்து வந்த நிலையில், ஹெரோயின் விற்பனை செய்து வந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி இரவு வடமத்திய மாகாண விஷேட காவற்துறை பிரிவால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் ஹெரோயினை கொள்வனவு செய்ய வந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 9 ஹெரோயின் பெக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேக நபரான காவற்துறை உத்தியோகஸ்தர் அநுராதபுரம் தொடரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரொயினுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 28 வயதான திருமணமாகாகத காவற்துறை உத்தியோகஸ்தர் என்பதுடன், ஹொரவபொத்தானை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த காவற்துறை உத்தியோகஸ்தர் 8 வருடமாக காவற்துறை சேவையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 21 ஆம் திகதி இரவு வடமத்திய மாகாண விஷேட காவற்துறை பிரிவால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் ஹெரோயினை கொள்வனவு செய்ய வந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 9 ஹெரோயின் பெக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேக நபரான காவற்துறை உத்தியோகஸ்தர் அநுராதபுரம் தொடரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரொயினுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 28 வயதான திருமணமாகாகத காவற்துறை உத்தியோகஸ்தர் என்பதுடன், ஹொரவபொத்தானை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த காவற்துறை உத்தியோகஸ்தர் 8 வருடமாக காவற்துறை சேவையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.