நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம்;இரண்டு விசாரணை குழுக்கள் நியமனம்

Monday, 24 July 2017 - 14:21

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3B%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகத்திற்குரியவரை கைது செய்ய விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சாதாரண உடையுடன் உள்ள அதிகாரிகளை கொண்ட இரண்டு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது இதுவரையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 30ற்கும் அதிகமானவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், பிரதான சந்தேகத்திற்குரியவர் மறைந்துள்ள இடம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவரை கைது செய்ய நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகிலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு நினைவஞ்சலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.