வௌியேறினார் சந்திமால்

Monday, 24 July 2017 - 16:05

%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
நோய் நிலைமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மருத்துவமனையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் அவர் இவ்வாறு வௌியேறியுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபையின் மருத்துவப் பரிந்துரை பிரிவின் உறுப்பினரான பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக சந்திமால் தனியார் மருத்துவமனையொன்றில ்அனுமதிக்கப்பட்ட நிலையில் , பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன்படி , சிகிச்சை பெற்றுவந்த சந்திமாலுக்கு , நோய் நிலைமை குறைவடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,சந்திமாலை பரிசோதித்த மருத்துவர் அர்ஜுன த சில்வாவின் பரிந்துரையின் படி அவர் வீடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் , சுமார் ஒரு வாரக்காலம் ஓய்வு பெற வேண்டும் என பேராசிரியர் மருத்துவர் அர்ஜுன த சில்வா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.

அதன்படி , இலங்கை - இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடுவார் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் காலி சர்வதேச விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.